நம் தலைமுறைக்கான சினிமா..அருவி
நோய் பீடித்துள்ள ஒரு சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் சமூகம் மீதான கோபம், ஆதங்கம், தன் அடிமனதில் தேங்கியிருந்த ஆசைகள், ஏக்கங்கள், கவலைகள், சந்தோசங்கள் என்று உணர்ச்சிகளை அருவியாகக் கொட்டியிருக்கும் திரைப்படம் அருவி.. தமிழ் சினிமாவில் நான் அறிந்தவரையில் எய்ட்ஸ் நோயாளிகளின் வலிகள், வாழ்வியல், அதற்கு பின் உள்ள அரசியல் பற்றி பேசியுள்ள முதல் திரைப்படம் அருவி.. உலக திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பாராட்டு பெற்ற திரைப்படம் என்று விளம்பரம் செய்யப்பட்டு ஏமாற்றாத திரைப்படம்.. ஒரு படைப்பு நமது சிந்தனைகளை சில காலமாவது ஆட்சி செய்ய வேண்டும்..நம்மை தூங்க விடாமல், உட்கார விடாமல், நடக்க விடாமல் பாடாய்ப்படுத்த வேண்டும்..அப்படியான ஒரு படைப்பு அருவி.. பொதுவாக சமூக கட்டுப்பாடுகள் என்று யாராவது பேச ஆரம்பித்தாலோ, எழுதியிருப்பதை படிக்க நேர்ந்தாலோ, அதைப்பற்றி பேசும் திரைப்படங்கள் என்றாலோ காந்தியின் குரங்கு பொம்மைகள் போல காது, வாய், கண் இவற்றை மூடிக்கொண்டுவிடுவது வழக்கம்..ஏனென்றால் பெரும்பாலும் ஃப்ரீ செக்ஸ், குடும்பக் கட்டமைப்பை சிதைத்தல், ஒழுக்கக்கேடான பழக்கங்களில் ஆணுக்கு இணையாக பெண்ணை ந