Posts

Showing posts from August, 2017

பேருந்துக்குள் நடைப் பயணம்...!

Image
அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு செல்வதற்காக  பேருந்து நிறுத்தத்திற்கு சென்றேன்.. பேருந்தும் வந்தது வழக்கம் போல் நிறுத்தத்தை விட்டு தள்ளியே நின்றது காற்று புகக் கூட இடமில்லா பேருந்தில் நானும் புகுந்து கொண்டேன்.. நீண்ட தூ(நே)ர பயணம் என்பதால் அமர மனம் நாடியது.. கண்கள் இடம் தேடியது.. தூரத்தில் ஒருவர் எழுந்து செல்வது போல தோன்றியது, சனக்கடலை நீந்தி அங்கு செல்வதற்குள் இன்னொருவர் அமர்ந்துவிட்டார்.. திரும்பிப் பார்த்தேன் நான் நின்ற இடத்தின் அருகில் அமர்ந்திருந்தவர் இறங்கிவிட்டார்.. அங்கேயே நின்றிருக்கலாமோ என்று  உள்மனம் உச்சுக் கொட்டியது.. நேரம் சென்றதே ஒழிய அமர இடம்தான் கிடைக்கவில்லை.. எனக்கு பின்னால் ஏறியவர்கள் எல்லாம் அமர்ந்துவிட்டனர், நானோ அமர இடம் தேடித் தேடி அயர்ந்துவிட்டேன்.. சரி நின்ற இடத்திலேயே நிற்போம் என்று அங்கேயே நின்றேன்.. அங்கு அமர்ந்திருந்தவரோ எழுந்துவிடுவேனா பார்க்கலாம் என்பது போல சற்றும் நகராமல் அமர்ந்திருந்தார், வீணையுடன் இருக்கும் கலாமைப் போல.. வெளியே வாகன நெரிசல், உள்ளே மக்கள் நெரிசல், சென்னையின் இருபெரும் அடையாள