மூன்று மரணங்களும் மூன்று செய்திகளும்..!
மரணம் உலகப்பொது நியதி. பிறக்கும் அனைவரும் ஒருநாள் இறக்கத்தான் போகின்றோம். தினமும் பல இறப்பு செய்திகள் நம்மைக் கடந்து செல்கின்றன. நாமும் பல இறப்புகளை கடந்து வருகின்றோம். எல்லா மரணங்களும் நம் நினைவில் நிற்பதில்லை. சில மரணங்கள் நம்முள் சில சலனங்களை ஏற்படுத்தலாம். சில மரணங்களை நாமே கூட விரும்புவதுண்டு. பொதுவாக மரணங்களுக்கான எதிர்வினைகள் சில நாட்கள் மட்டுமே. அதற்கு பிறகு நம்முடைய இயல்பு வாழ்க்கை திரும்பிவிடும் அல்லது திருப்பப்படுவோம். சில மரணங்கள் நம்மை கலங்க வைப்பதுடன் உறங்கவும் விடாமல் உலுக்கி எடுத்துவிடும். கண்கள் அருவியாக மாறிக் கண்ணீரை சுரந்த வண்ணம் இருக்கும். வெகு நாட்கள் நம் நினைவுகளையும் அன்றாட நிகழ்வுகளையும் ஆக்கிரமிக்கும். இன்றைய சூரியன் உதிக்காமல் இருந்திருக்கலாமோ என்று இயற்கையையும் மீறி நம்மை சிந்திக்க வைக்கும். அப்படிப்பட்ட மரணங்களால் சமுதாயத்தில் மாற்றங்கள் மலரும்; புரட்சிகள் வெடிக்கும்; புதிய கதவுகள் திறக்கும். கடந்த ஜூலை மாதம் அப்படிப்பட்ட மூன்று மரணங்களைக் கண்டுள்ளது. அந்த மூன்று மரணங்களும் மூன்று செய்திகளை, மாற்றத்திற்கான விதைகளை சமுதாயத்தில் விதைத்துச் சென்றுள்ளது. ஏன்