விடியல் எப்போது?
நமது அண்டை நாடான மியான்மரில்(பர்மா) முஸ்லீம் மக்கள், கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். மியான்மர் முஸ்லீம்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன்பும் அவர்கள் ஆதிக்க சக்திகளால் வேட்டையாடப்பட்டதும், அகதிகளாக வங்காள தேசத்திலும், மலேசியாவிலும் குடியேறிய இரத்தம் தோய்ந்த வரலாறு உலகம் அறிந்ததே..ஏன், இந்தியாவிலும் கூட பல ஆயிரம் மியான்மர் முஸ்லீம்கள் அகதிகளாக குடியேறி, பின்பு இந்திய குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இந்த முறை அவர்கள் தாக்கப்படுவது அமைதிக்கும், துறவறத்திற்கும் பெயர் பெற்ற புத்த மதத்தைச் சார்ந்தவர்களால்..புத்தர் உயிருடன் இருந்திருந்தால், இப்படி ஒரு தீவிரவாதக் கூட்டத்தை உருவாக்கியதை எண்ணி வெட்கப்பட்டு, மீண்டும் போதிமரத்தைத் தேடி போயிருப்பார். அந்த அளவிற்கு பச்சிளங்குழந்தைகள்,பெண்கள்,முதியவர்கள் என்று அவர்களின் பேயாட்டம் யாரையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுடைய இந்த கொலைவெறியாட்டத்திற்கு அரசும், ராணுவமும் துணை நிற்பதுதான் சோகத்திலும் சோகம். அமைதிக்கான நோபல் பரிசு வென்ற ஆங் சான் சூகியும், புத்த மதத்தலைவர் தலாய் லாமாவும் கூட முஸ்லீம்கள் மீதான இ