தேறுமா ஆறு மாதம்?
தேறுமா ஆறு மாதம்? (இந்த கட்டுரை சமரசம் 16-18 பிப்ரவரி இதழில் பிரசுரமானது) அரியணை ஏறி ஆறு மாதங்களை கடந்தாகிவிட்டது. முன்னெடுக்கப்பட்ட கோஷங்கள் எல்லாம் வெறும் முழக்கங்களாகவே முடங்கிவிட்டது. வளர்ச்சியின் நாயகனுக்கு ஓட்டு போட்டால் தங்கள் வாழ்வை வானளாவ உயர்த்தி விடுவார் என்று வாக்களித்த மக்கள் வாய்க்குள் விரலை வைத்துக் கொண்டுவிட்டனர். கருப்புப் பணத்தை கைப்பற்றி வழங்குவார் என்று எதிர்ப்பார்த்தவர்கள் தங்கள் இருப்புப் பணத்துக்கே மோசம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மடிகளில் கைகளை இறுக்கக் கட்டிக் கொண்டுள்ளனர். டீ கடையில் வேலை பார்த்தவர் நம் கவலைகளை நன்கு அறிவார் என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் அவர் அதானி, அம்பானி என்று கோடீக்களின் கவலையை மட்டுமே கவனிக்கிறார் என்று வெம்பிக் கொண்டிருக்கின்றனர். பத்து வருடம் ஆகிவிட்டது. பக்குவப்பட்டிருப்ப(பா)ர் என்று பசலை கொண்டவர்கள் இன்று பரிவாரங்களின் ஆட்டம் பார்த்து பதறிப் போயுள்ளனர். ஆட்சி காலத்தில் 10%ஐ முடித்துவிட்ட ஒரு அரசாங்கம் தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் அதே அளவையாவது நிறைவேற்றியுள்ளதா என்று ச