முரண் அரசும் பெரும்பான்மை அமைதியும்..!
ஒரு குறிப்பிட்ட மதத்தினரை நேரடியாக தாக்கும் அத்தனை அயோக்கியத்தனங்களையும் அதிகாரத் திமிரில் அரங்கேற்றம் செய்து வரும் ஆட்சியாளர்கள்..அப்படி அவர்கள் செய்யும் அராஜகங்களை பெரும்பான்மை மக்கள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றார்கள்..நிதர்சனத்தில் பெரும்பான்மை மக்களை அவர்களையும் அறியாமல் இந்த நடவடிக்கைகள் எல்லாம் நியாயம்தான் என்ற மன மாயையில் சிக்க வைத்துவிட்டு தங்கள் செயல்திட்டங்களை மிக அழகாக நடைமுறைப்படுத்துகின்றனர் என்பதுதான் உண்மை ..! ஒருபுறம் முஸ்லிம்களை மீட்டெடுக்கிறேன் பேர்வழி என்று நடவடிக்கைகள் எடுத்துவிட்டு, இன்னொரு பக்கம் அதற்கு முரணான காரியங்களில் ஈடுபட்டுவருகின்றது இந்த சர்வாதிகார அரசாங்கம்.. முஸ்லிம்கள், தலித்களின் உணவு, வியாபார உரிமையில் நேரடியாக கை வைத்த மாட்டிறைச்சி தடை சட்டத்தை பசு பாதுகாப்பு என்ற பெயரில் கொண்டு வந்தனர்..ஆனால் அந்த மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேலையை ஆத்மசுத்தியுடன் செய்தனர்.. முஸ்லிம்கள் உடனடியாக விவாகரத்து செய்யும் முறை பெண்களை பாதிப்பதாக கதறி, கண்ணீர் விட்டு அதனை தடை செய்து சட்டம் இயற்றினார்கள்..அதே நேரத்தில் இந்து திருமண சட்டப்படி வ